திரையரங்களுக்கு உணவு எடுத்து செல்லலாமா? சென்னை ஐகோர்ட் புதிய உத்தரவு
கடந்த ஆண்டு மகாராஷ்டிரா மாநிலம் பிறப்பித்த ஒரு உத்தரவில் திரையரங்குகளுக்கு செல்லும் பார்வையாளர்கள் உணவு மற்றும் தண்ணீர் பாட்டில்கள் திரையரங்குகளுக்குள் எடுத்து செல்லலாம் என அறிவித்தது.
இதனையடுத்து தமிழகத்தில் உள்ள திரையரங்குகளிலும் உணவு மற்றும் தண்ணீர் பாட்டில்களை கொண்டு செல்ல அனுமதிக்க உத்தரவிடுமாறு சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டது.
தமிழகத்தில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் உணவு மற்றும் குடிநீர் கொண்டு செல்ல அனுமதி இல்லாத நிலையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் வெளி உணவுகளைத் திரையரங்குகளுக்கு எடுத்துச்செல்ல மகாராஷ்டிராவில், மாநில அரசு அனுமதியளித்துள்ளது.
இந்த வழக்கின் தீர்ப்பு நேற்று வெளியான நிலையில் திரையரங்களுக்கு உணவு மற்றும் குடிநீரை வெளியில் இருந்து எடுத்து செல்ல அனுமதி கோரிய மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் தமிழகத்தில் உள்ள திரையரங்குகளுக்குள் உணவு, தண்ணீர் எடுத்து செல்ல அனுமதி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது
Leave a Reply
You must be logged in to post a comment.