திருவள்ளுவர் சிலையை அவமதித்தது யார்? ஐ.ஜி. வரதராஜு பேட்டி
தஞ்சை அருகே உள்ள பிள்ளையார்ப்பட்டி என்ற பகுதியில் இருந்த திருவள்ளுவர் சிலை நேற்று நள்ளிரவில் மர்ம நபர்கள் சிலர் அவமதித்துவிட்ட நிலையில் இந்த விவகாரம் காரணமாக போராட்டம் வெடித்துள்ளது.
ஒரு திருக்குறளை கூட படித்து அர்த்தம் சொல்ல தெரியாதவர்கள் எல்லாம் திருவள்ளுவருக்காக போராட ஆரம்பித்துவிட்டனர்
இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து பேட்டியளித்த ஐ.ஜி. வரதராஜு கூறியதாவது: திருவள்ளுவர் சிலை அவமதிப்பு விவகாரம் இரவு 11 மணிக்கு மேல் நடைபெற்றுள்ளது. 4 தனிப்படைகள் அமைத்து, மர்ம நபர்களை அடையாளம் கண்டு வருகிறோம். அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவை கொண்டு ஆய்வு செய்து வருகிறோம். இது சமூக ரீதியான பிரச்னை அல்ல, குற்றவாளியை விரைவில் பிடிப்போம் – என்று கூறினார்,
Leave a Reply
You must be logged in to post a comment.