shadow

திருவனந்தபுரம் கடற்கரை பகுதியில் ஒதுங்கிய 12 சடலங்கள்: அதிர்ச்சியில் மீனவர்கள்

சமீபத்தில் அடித்த ஓகி புயல் காரணமாக குமரி மாவட்டமே ஸ்தம்பித்து போயுள்ள நிலையில் கடலுக்குள் மீன் பிடிக்க சென்ற நூற்றுக்கணக்கான மீனவர்களின் கதி என்னவாயிற்று என்ற அச்சத்துடன் மீனவர்களின் குடும்பங்கள் உள்ளன.

ஒவ்வொரு நாளும் மீட்புப்படையினர்களால் காப்பாற்றப்படும் மீனவர்களில் தங்கள் குடும்பத்தை சேர்ந்தவர்கள் இருக்கின்றார்களா? என்று மீனவர்களின் குடும்பங்கள் அச்சத்துடன் கவனித்து வரும் நிலையில் திருவனந்தபுரம் விழிஞ்சம் கடற்கரை பகுதியில் 12 சடலங்கள் கரை ஒதுங்கியதாக வந்த தகவல் மீனவர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுவரை வந்த தகவலின் அடிப்படையில் கரை ஒதுங்கிய சடலங்களில், இருவர் தூத்துக்குடி மாவட்ட மீனவர்கள் என கூறப்படுகிறது. மேலும் தூத்துக்குடியிலிருந்து மீன் பிடிக்கச் சென்ற 16 மீனவர்களில் 13 பேர் இறந்திருக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது.

Leave a Reply