shadow

திருமுருகன் காந்தியின் தந்தை மனு சென்னை ஐகோர்ட்டில் தள்ளுபடி

திருமுருகன் காந்தி கைது செய்யப்பட்டதை ரத்து செய்யக்கோரி அவரது தந்தை தாக்கல் செய்த மனுவை சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது. மேலும் ஆட்கொணர்வு மனுவில் ஜாமீன் வழங்க முடியாது எனக் கூறி சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்ததாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி சில மாதங்களுக்கு முன்பு, தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து ஜெனிவாவில் உள்ள சர்வதேச ஐநா சபையில் பேசினார். இந்நிலையில், அவர் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியதாகவும், அதில் அரசுக்கு எதிராக பேசியதாகவும், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் அவர் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது திருமுருகன் காந்தி மொத்தம் 9 வழக்குகளுக்காக சிறையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply