shadow

திருமணத்திற்கு சில நிமிடங்களுக்கு முன் விபத்தில் இறந்த மணமகன்: மணமகள் அதிர்ச்சி

வியட்னாம் நாட்டில் உள்ள காங்க் ட்ரி என்ற பகுதியில் இருந்து திருமணத்துக்காக மணமகன் உட்பட அவரது குடும்பத்தினர் 17 பேர் மினி பேருந்து ஒன்றில் பின்ஹ் டின்ஹ் என்ற பகுதிக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிரே வந்த சரக்கு லாரியும் மணமகன் வீட்டார் சென்ற பேருந்தும் நேருக்கு நேர் மோதியதால் ஏற்பட்ட பயங்கர விபத்தில் மணமகன் உள்ளிட்ட 13 பேர் பரிதாபமாக பலியாகினர். மோசமான விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் மேலும் படுகாயங்களுடன் 4 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனதாகவும் அவர்களுடைய நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் செய்திகள் வெலிவந்துள்ளது. மேலும், சிறுகாயங்களுடன் தப்பிய லாரி ஓட்டுனரை கைது செய்த போலீசார் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தனது திருமண விழாவுக்கு செல்லும் வழியில் மணமகனும் அவரது குடும்பத்தாரும் விபத்தில் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் மணமகள் அதிர்ச்சியில் மயக்கமுற்றதாக கூறப்படுகிறது.

Leave a Reply