திருப்பூரில் பெண் காவலர் திடீர் தற்கொலை! என்ன காரணம்?

திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் பெண் காவலர் பர்வீன் பாவி என்பவர் பாதுகாப்பு பணியில் கடந்த சில நாட்களாக ஈடுபட்டு வந்தார். நல்லூரில் வசித்துவரும் இவர் திடீரென தனது வீட்டில் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

அவர் விஷம் அருந்தியை அறிந்தவுடன் அக்கம் பக்கத்தினர் உடனடியாக உயிருக்கு போராடிக்கொண்டிருந்த பர்வீன் பாவியை மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அவரது உயிர், வழியிலே பிரிந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

ஏற்கனவே காவல்துறையினர் தற்கொலை சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், பர்வீன் பாவியின் தற்கொலை பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. திருப்பூர் ஊரக போலீசார், இந்த சம்பவம் குறித்து தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.

Leave a Reply