திருப்பரங்குன்றம் வழக்கு: ஏ.கே.போஸ் வெற்றி செல்லாது! அதிரடி தீர்ப்பு

திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் ஏ.கே.போஸ் பெற்ற வெற்றி பெற்றது செல்லாது என்று சென்னை ஐகோர்ட் சற்றுமுன் தீர்ப்பளித்துள்ளது. ஏ.கே.போஸ் ஏற்கனவே காலமாகிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த தீர்ப்பில் சென்னை ஐகோர்ட் நீதிபதி வேல்முருகன் மேலும் குறிப்பிட்டபோது, ‘மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வந்த ஜெயலலிதா, ஏ.கே.போஸ் வேட்புமனுவில் கைரேகை வைத்திருந்தார். ஜெயலலிதாவின் கைரேகைக்க்கு அரசு மருத்துவர் பாலாஜி அளித்த சான்றிதழ் செல்லாது என்பதால் ஏ.கே.போஸ் பெற்ற வெற்றியும் செல்லாது என்று குறிப்பிட்டுள்ளார்.

இன்று வெளியான தீர்ப்பை அடுத்து திருப்பரங்குன்றம் தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்படுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Leave a Reply