திருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத்தேர்தல் எப்போது? தலைமை தேர்தல் ஆணையம்
திமுக தலைவர் கருணாநிதியின் மறைவினால் காலியான திருவாரூர் மற்றும் அதிமுக எம்.எல்.ஏ ஏ.கேபோஸ் மறைவினால் காலியான திருப்பரங்குன்றம் தொகுதி ஆகிய இரண்டு தொகுதிகளுக்கும் தேர்தல் இப்போது நடத்த வேண்டாம் என தலைமை செயலாளர் கேட்டுக்கொண்டதால் இன்று இந்த இரண்டு தொகுதிகளின் தேர்தல் அறிவிப்பு அறிவிக்கப்படவில்லை என தேர்தல் ஆணையர் தெரிவித்தூள்ளார்.
இன்று தெலுங்கானா, ராஜஸ்தான் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல் குறித்த தேதியை அறிவித்த தலைமை தேர்தல் ஆணையர் தமிழகத்தின் திருவாரூர் மற்றும் திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார். .
மழைக்காரணமாக தமிழகத்தில் தற்போது இடைத்தேர்தல் வேண்டாம் என தமிழக தேர்தல் ஆணைய அதிகாரி கடிதம் எழுதியதாகவும், அவரது கோரிக்கையை ஏற்று இடைத்தேர்தலுக்கான தேதியை இப்போது அறிவிக்க இயலாது எனவும் தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
Leave a Reply
You must be logged in to post a comment.