திருச்சி மாவட்ட திமுக செயலாளராக உதயநிதியின் நண்பர் நியமனம்
திமுக இளைஞரணி துணைச் செயலாளராக இருக்கும் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருச்சி தெற்கு மாவட்ட செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளதாக சற்றுமுன் திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் வெளியிட்டுள்ளார்.
கடந்த 27 ஆண்டுகாலமாக திருச்சி மாவட்டச் செயலாளராக இருந்த கே.என்.நேருவின் பதவிக்காலம் இன்றுடன் முடிவடைந்ததை அடுத்து தற்போது அன்பில் மகேஷ் பொய்யாமொழி அந்த பதவிக்கு நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
அன்பில் மகேஷ் பொய்யாமொழி மாவட்ட செயலாளர் ஆகியுள்ளதால் திருச்சியில் திமுகவின் செல்வாக்கு உயருமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
Leave a Reply
You must be logged in to post a comment.