shadow

திருச்சி சமயபுரம் வங்கியில் 500 சவரன் நகை, கோடிக்கணக்கில் பணம் கொள்ளை

திருச்சி, சமயபுரம் பிச்சாண்டார்கோயில் பகுதியில் பஞ்சாப் நேஷனல் வங்கி இயங்கி வருகிறது. இந்த வங்கியில் அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் வங்கிக் கணக்கு மற்றும் நகை அடகு வைத்துள்ளனர்.

இந்த நிலையில் குடியரசு தினம் மற்றும் ஞாயிறு என இரண்டு நாள்கள் விடுமுறையை அடுத்து இன்று வங்கி திறக்கப்பட்டது. அப்போது வங்கியின் மேற்கூரையில் ட்ரில்லிங் மெஷின் மூலம் பெரிய ஓட்டை இருந்ததுடன், ஐந்து லாக்கர்கள் உடைந்து, திறந்து கிடப்பதை பார்த்து வங்கி ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த கொள்ளை சம்பவத்தில் லாக்கர்களில் இருந்த 500 சவரன் நகை மற்றும் பல கோடி ரூபாய் மதிப்பிலான பணம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக வங்கி ஊழியர்கள் போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர்.

இதனையடுத்து பஞ்சாப் நேஷனல் வங்கி விரைந்து வந்த போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர். கொள்ளையர்கள் விட்டுப்போன ஒருசில தடயங்கள் கிடைத்துள்ளதாகவும் விரைவில் கொள்ளையர்கள் பிடிபடுவார்கள் என்றும் போலீசார் தெரிவித்தனர்

Leave a Reply