திரிணாமுல் காங்கிரஸ் பிரமுகர் சுட்டுக்கொலை: மேற்குவங்கத்தில் பரபரப்பு
மேற்குவங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் பிரமுகர் நஜு ஷேக் என்பவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளதால் அம்மாநிலத்தில் பரபரப்பும் பதட்டமும் நிலவி வருகிறது
மேற்குவங்க மாநிலத்தில் உள்ள பெராம்பூரில் நஜு ஷேக்கை இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சரமாரியாக சுட்டனர். இதில் சம்பவ இடத்திலேயே நஜூஷேக் மரணம் அடைந்தார்.
பட்டப்பகலில் நடந்த இந்த கொலையால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் தீவிரமாக கொலையாளிகளை தேடி வருகின்றனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.