திராவிட இயக்கத்தில் நான் தளபதி: முக ஸ்டாலின்
சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் மதிமுக சார்பில் நடைபெறும் பேரறிஞர் அண்ணா 111-வது பிறந்த நாள் விழா மாநாடு தொடங்கியது. இந்த மாநாட்டில் திமுக தலைவர் ஸ்டாலின் தொடங்கி வைத்து பேசியதாவது:
திராவிட இயக்கத்தில் நான் எப்படி நிரந்தர தளபதியோ, அதேபோல் நிரந்தர போர்வாள் வைகோ தான் என்றும், நீர் அடித்து நீர் விலகாது என்பது போல் நாம் ஒன்றாகி உள்ளோம் என்றும் மு.க.ஸ்டாலின் பேசினார்.
மேலும் திமுகவுக்கு பக்கபலமாக வைகோ இருக்கிறார் என்றும், வைகோவிற்கு திமுக சார்பாக நன்றி 40 தொகுதிகளில் 39 தொகுதிகளில் சரித்திர சாதனையை பெற்றுள்ளோம் என்றும் அதற்கு வைகோவும் ஒரு காரணம் என்றும் முக ஸ்டாலின் தெரிவித்தார்.
Leave a Reply
You must be logged in to post a comment.