திமுக வெற்றி பெற்றுவிட்டால்….அமைச்சர் தங்கமணி எச்சரிக்கை
திமுக, அதிமுக என இரண்டு கூட்டணியில் உள்ள கட்சிகளும் வேட்புமனு தாக்கல் செய்துவிட்டு விறுவிறுப்பான பிரச்சாரத்தை தொடங்கிவிட்டன. ஒருபக்கம் மு.க.ஸ்டாலின், இன்னொரு பக்கம் எடப்பாடி பழனிச்சாமி என பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது
இந்த நிலையில் இன்று தேர்தல் பிரச்சார கூட்டம் ஒன்றில் பேசிய அமைச்சர் தங்கமணி, ‘மெகா கூட்டணி என்று மெத்தனம் காட்டாமல் வெற்றிக்காக பாடுபட வேண்டும் என்றும் ஒருவேளை திமுக வெற்றி பெற்றுவிட்டால் பொய் வழக்குகள் போட்டு அதிமுகவினரை துன்புறுத்துவார்கள் என்றும் எச்சரித்துள்ளார்.
மேலும் வாக்குச்சாவடியில் பணியாற்றுபவர்கள் அதிமுக அரசின் மீது கோபத்தில் உள்ளதால், அதிமுக மற்றும் கூட்டணி கட்சியினர் வாக்குச்சாவடி முகவராக செல்லும்போது கவனமாக இருக்க வேண்டும் என்றும் அமைச்சர் தங்கமணி அறிவுறுத்தியுள்ளார்
Leave a Reply
You must be logged in to post a comment.