திமுக வெற்றிக்காக தீவிர பிர்ச்சாரம்: வைகோ, திருமாவளவன் உறுதி

4 தொகுதி இடைத்தேர்தலிலும் திமுக வெற்றிபெற தீவிர பிரச்சாரம் செய்யப் போவதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மற்றும் விடுதலைச்சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் ஆகியோர் உறுதி அளித்துள்ளனர்,.

வரும் மே மாதம் 19ஆம் தேதி திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம், சூலூர் மற்றும் அரவக்குறிச்சி ஆகிய தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த தேர்தலுக்கான பிரச்சாரம் செய்ய அரசியல் தலைவர்கள் தயாராகி வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த நான்கு தொகுதிகளிலும் திமுக வெற்றி பெற பிரச்சாரம் செய்யவிருப்பதாக வைகோ, திருமாவளவன் தெரிவித்துள்ளனர். இவர்கள் இருவரும் பிரச்சாரம் செய்தாலே அது எதிரணிக்கு பெரிய வெற்றி என நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்.

Leave a Reply