திமுக பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு: இருவர் கைது
சென்னை டி.பி.சத்திரத்தில் திமுக பகுதி செயலாளர் பரமசிவன் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய எஸ்.டி.பி.ஐ கட்சியை சேர்ந்த யூனுஸ், உமர் ஆகிய இருவர் கைது கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது
வரும் மக்களவை தேர்தலில் அமமுகவுடன் கூட்டணி வைத்துள்ள எஸ்.டி.பி.ஐ கட்சியினர் தமிழகம் முழுவதும் அமமுக வேட்பாளர்களுக்கு பிரச்சாரம் செய்து வருகின்றனர். மேலும் எஸ்.டி.பி.ஐ கட்சியின் சார்பில் தெஹ்லான் பார்கவி என்பவர் மத்திய சென்னை தொகுதியில் தயாநிதி மாறனை எதிர்த்து போட்டியிடுகிறார்.
இந்த நிலையில் திமுக பகுதி செயலாளர் பரமசிவன் வீட்டில் எஸ்.டி.பி.ஐ கட்சியை சேர்ந்தவர்கள் பெட்ரோல் குண்டு வீசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
Leave a Reply
You must be logged in to post a comment.