திமுக தாக்கல் செய்த பேனர் பிராமணப்பத்திரத்தில் டுவிஸ்ட்!

தி.மு.க. கட்சி நிகழ்ச்சிகளில் பொதுமக்களுக்கு இடையூறாக அனுமதியின்றி பேனர் வைக்க மாட்டோம் என்று அக்கட்சி சார்பில் உயர்நீதிமன்றத்தில் பிராமணப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த பிராமணப்பத்திரத்தில் இருந்து பேனர்களே இனி வைக்க மாட்டோம் என திமுக உறுதி கூறவில்லை. பொதுமக்களுக்கு இடையூறாகவும் அனுமதியின்றியும் வைக்க மாட்டோம் என்று கூறியுள்ளதாகவும், அப்படியென்றால் பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத இடங்களிலும் அனுமதி பெற்றும் பேனர் வைப்போம் என்பதையும் மறைமுகமாக திமுக தெரிவித்துள்ளதாகவும் சமூக வலைத்தள பயனாளிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

பேனர் கலாச்சாரம் என்பது அரசியல்வாதிகளின் ரத்தத்தில் ஊறியது என்பது அதை இப்போதைக்கு ஒழிக்க முடியாது என்றும் இதுவொரு தற்காலிய வாக்குறிதியே என்றும் கருத்து நிலவி வருகிறது

Leave a Reply