திமுக தடை செய்யப்படும் இயக்கமாக மாறி வருகிறது: பிரேமலதா விஜயகாந்த்
தடை செய்யப்படக்கூடிய இயக்கமாக திமுக மாறி வருவதாகவும், அக்கட்சி என்.ஐ.ஏ வின் அபாய பிடியில் இருப்பதால் திமுகவுக்கு எந்த நேரத்திலும் ஆபத்து வரலாம் என்றும் திருப்பூரில் நேற்று நடைபெற்ற தேமுதிகவின் முப்பெரும் விழா அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பேசியுள்ளார். மேலும் பேனர் கலாச்சாரத்தை கொண்டு வந்ததே திமுக தான் என்றும், தேமுதிக தொடங்கப்பட்ட பின்னர் திமுகவால் ஆட்சிக்கு வர முடியவில்லை என்றும் பேசினார்.
இதே கூட்டத்தில் பேசிய விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன், ‘உதயநிதி ஸ்டாலினையும், தம்மையும் ஒப்பிட்டு பேச வேண்டாம் என்றும் அவருக்கு திருமணமாகிவிட்டது, அவரது கட்சி பழையது ஆகிவிட்டது என்றும் தெரிவித்தார்
இந்த கூட்டத்தில் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பாராட்டு, ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு உள்பட 15 தீர்மானங்கள் இயற்றப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது
Leave a Reply
You must be logged in to post a comment.