ஹெச். ராஜா
திமுக ஒரு சட்டவிரோத அமைப்பு என்பதை மக்கள் இனியாவது உணர வேண்டும் என பாஜக தேசிய செயலாளர் ஹெச் ராஜா அவர்கள் தனது டுவிட்டரில் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
திமுக எம்எல்ஏ இதயவர்மன் சமீபத்தில் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் நேற்று போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவரை 15 நாட்கள் காவலில் வைக்கும்படி நீதிபதி உத்தரவிட்டதை அடுத்து புழல் சிறையில் அவர் அடைக்கப்பட்டு செய்திகள் வெளியாகியுள்ளது
இந்த நிலையில் திமுக எம்எல்ஏ கைது குறித்து கருத்து தெரிவித்த ஹெச்.ராஜா திமுக ஒரு சட்டவிரோத அமைப்பு என்பதை இனியாவது மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார் இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
திமுக ஒரு சட்டவிரோத அமைப்பு என்பதை இனிமேலாவது மக்கள் உணரவேண்டும். //t.co/MXN5tDHNRo
— H Raja (@HRajaBJP) July 12, 2020
Leave a Reply
You must be logged in to post a comment.