திமுக – காங்கிரஸ் கூட்டணி படுதோல்வி அடையும்: மு.க.அழகிரி
வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக-காங்கிரஸ் கூட்டணி வைத்துள்ள நிலையில் இந்த கூட்டணி படுதோல்வி அடையும் என முன்னாள் மத்திய அமைச்சரும் கருணாநிதியின் மகனுமான மு.க.அழகிரி தெரிவித்துள்ளார்.
மேலும் வரும் மக்களவைத் தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை என்ற தனது நிலையையும் தெரிவித்துள்ளார். இதே நிலையைத்தான் சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்த் எடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
கருணாநிதியின் மறைவுக்கு பின் மீண்டும் திமுகவில் மு.க.அழகிரி இணைய முயற்சித்தார் என்பதும் ஆனால் இந்த முயற்சி பலனளிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
Leave a Reply
You must be logged in to post a comment.