திமுக எம்.எல்.ஏ வீட்டில் போலீசார் திடீர் சோதனை: பெரும் பரபரப்பு
கரூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ செந்தில்பாலாஜி வீட்டில் சற்றுமுன்னர் திடீரென போலீசார் நுழைந்து சோதனை செய்து வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
கடந்த 2011-16 ஆண்டுகளில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தபோது வேலை வாங்கித்தருவதாக பணம் பெற்று மோசடி செய்ததாக செந்தில் பாலாஜி மீது அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் எம்.எல்.ஏ செந்தில் பாலாஜியின் வீட்டில் போலீசார் சோதனை செய்து வருவதாக கூறப்படுகிறது. செந்தில் பாலாஜி வீட்டில் போலீஸ் விசாரணை செய்ததாக வரும் தகவலை அடுத்து அவரது வீட்டின் முன் திமுக தொண்டர்கள் குவிந்துள்ளனர்.
கடந்த ஆண்டு அமமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்த செந்தில் பாலாஜி தற்போது திமுகவின் முக்கிய புள்ளியாக இருந்து வரும் நிலையில் திடீரென அவரது வீட்டில் சோதனை நடப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
Leave a Reply
You must be logged in to post a comment.