shadow

திமுக ஊராட்சி சபைக்கூட்டம் பெரிய நாடகம்: தமிழிசை

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் கிராமம் கிராமமாக சென்று ஊராட்சி சபைக்கூட்டத்தில் கலந்து கொண்டிருக்கும் நிலையில் ஒருசில கட்சிகள் ஸ்டாலினின் இந்த கூட்டத்தை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றன.

அந்த வகையில் ஏற்கனவே இதுகுறித்து மத்திய அமைச்சர் பொன்ராதாகிருஷ்ணன் கடும் விமர்சனம் செய்திருந்த நிலையில் தற்போது தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜனும் இதுகுறித்து கூறியுள்ளார்.

திமுக ஊராட்சி சபைக்கூட்டம் பெரிய நாடகம் என்றும், கஜா புயல் தாக்கிய போது எத்தனை கிராமங்களுக்கு ஸ்டாலின் சென்றார் என்பதை பின்னோக்கி பார்த்தால் அவரது சுய நல அரசியல் தெரியும் என்றும் தமிழிசை பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

மேலும் பிரதமர் மோடியின் தமிழக வருகை பா.ஐ.க-விற்கு மிகப்பெரிய திருப்பு முனையாக அமையும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்

 

Leave a Reply