shadow

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் கல்விக்கடன் ரத்து: மு.க.ஸ்டாலின் வாக்குறுதி!

நாட்டின் எதிர்காலம் மாணவர்களின் கையில் இருப்பதால் அவர்களுடைய நலம் கருதி திமுக ஆட்சிக்கு வந்தவுடன் கல்விக்கடன் முழுவதும் ரத்து செய்யப்படும் என்றும் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் திமுக சார்பில் கிராமசபை கூட்டம் நடைபெற்று வரும் நிலையில் நேற்று திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே பள்ளபட்டி கிராமத்தில் நடந்த கிராம சபையில் திமுக தலைவர் முக ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

திமுக ஆட்சிக்கு வந்தால் ஒருவர் யார் என்றாலும் எந்த கட்சியை சேர்ந்தவர் என்றாலும், பாரபட்சமின்றி முதியோர் உதவித்தொகை வழங்கப்படும். மேலும் நாட்டின் எதிர்காலமாக திகழும் மாணவர்களின் நலன்கருதி, கல்விக்கடன் முழுவதும் ரத்து செய்யப்படும் என்று கூறினார்.

முன்னதாக காஷ்மீர் புல்வாமா தற்கொலைப்படைத் தாக்குதலில் உயிர் தியாகம் செய்த துணைராணுவப்படை வீரர்களுக்கு கிராம சபையில் மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.

 

Leave a Reply