திமுகவுக்கு ஓட்டு போட வேண்டாம் என ஏர்டெல் எஸ்.எம்.எஸ் அனுப்பியதா?

வரும் தேர்தலில் திமுகவிற்கு ஓட்டு போட வேண்டாம் என சென்னையில் உள்ள சிலர் மொபைல்லு எஸ்.எம்.எஸ் வந்தது. அந்த எஸ்.எம்.எஸ்-இல் ‘இந்து மதத்தை இழிவுபடுத்தி வாக்கு கேட்கும் திமுகவிற்கு வாக்களிக்க வேண்டாம் என்றும், அந்த எஸ்.எம்.எஸ், ஏர்டெல் பெயரில் இருந்ததாகவும் கூறப்பட்டது

இதுகுறித்த புகார் ஒன்றுக்கு பதிலளித்த ஏர்டெல், இந்தக் குறுஞ்செய்தியை தங்கள் நிறுவனம் அனுப்பவில்லை என்று றுத்துள்ளது. மேலும் இதுகுறித்து ஏர்டெல் நிறுவனம் மயிலாப்பூர் காவல்நிலையத்தில் புகார் ஒன்றையும் அளித்துள்ளது.

இந்த புகார் குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். விரைவில் ஏர்டெல் பெயரை பயன்படுத்தி எஸ்.எம்.எஸ் அனுப்பியவர் யார் என்பது தெரிய வரும் என நம்பப்படுகிறது

Leave a Reply