திமுகவில் நான் இல்லை: திமுக குறித்து என்னிடம் எதுவும் கேட்க வேண்டாம்: அழகிரி
திமுகவில் தற்போது நான் இல்லை என்பதால் திமுக குறித்து எந்த கேள்வியையும் என்னிடம் கேட்க வேண்டாம் என முன்னாள் மத்திய அமைச்சரும் கருணாநிதியின் மகனுமான மு.க.அழகிரி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
மேலும் செப்டம்பர் 5ஆம் தேதி சென்னையில் நடைபெறும் பேரணி, எதிர்காலத்தில் வெற்றியை தரும் என்றும் கூறிய மு.க.அழகிரி தன்னுடைய ஆதரவாளர்களுடன் கலந்து பேசி அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுக்கவுள்ளதாக கூறினார்.
மேலும் கருணாநிதியின் உண்மையான விசுவாசிகள் தன்பக்கம் இருப்பதாகவும், அவர்களுடன் ஆலோசனை செய்து விரைவில் நல்ல முடிவை அறிவிப்பேன் என்றும் அவர் கூறியுள்ளார்.
Leave a Reply
You must be logged in to post a comment.