shadow

திமுகவின் துணை பொதுச்செயலாளர் ஆகிறார் கனிமொழி

2ஜி வழக்கால் கனிமொழியின் எதிர்காலமே கேள்விக்குறியாகியிருந்த நிலையில் இன்று இந்த வழக்கில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டதால் அவரது எதிர்காலம் பிரகாசமாக இருப்பதாக திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

இதுவரை கட்சியில் புதிய பதவி பெற இந்த வழக்கு தடையாக இருந்த நிலையில் தற்போது இந்த வழக்கில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டதால் அவருக்கு திமுக துணை பொதுச்செயலாளர் பதவி வழங்க மு.க.ஸ்டாலின் ஆலோசனை செய்து வருகிறாராம்

கடந்த 2016ஆம் ஆண்டு திமுக துணை பொதுச்செயலாளர்களில் ஒருவரான சற்குணபாண்டியன் காலமானதை அடுத்து அந்த பதவி கடந்த ஒரு வருடமாக காலியாக உள்ளது. தற்போது அந்த பதவிக்கு கனிமொழி தேர்வு செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

Leave a Reply