தினேஷ் கார்த்திக், ஃபண்ட் அதிரடி வீண்: 4 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோல்வி
ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற இந்திய-ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான முதல் டி-20 போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்துவீச தீர்மானித்தது. இதனால் ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்து 17 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 158 ரன்கள் எடுத்தது.
ஆனால் இந்திய அணி பேட்டிங் செய்யும் முன் மழை குறுக்கிட்டதால் இந்திய அணிக்கு டக்ளஸ் லீவீஸ் முறைப்படி 17 ஓவரில் 174 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற இலக்கு கொடுக்கப்பட்டது. இதனையடுத்து பேட்டிங் செய்த இந்திய அணி 17 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 169 ரன்கள் மட்டுமே எடுத்ததால் ஆஸ்திரேலிய அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
தினேஷ் கார்த்திக் மற்றும் ஃபண்ட் அதிரடியாக விளையாடியபோதிலும் 16வது ஓவரில் ஃபண்ட் மற்றும் 17வது ஓவரில் தினேஷ் கார்த்திக் அவுட் ஆனது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக இருந்தது. போட்டியின் கடைசி ஓவரை ஸ்டோனிஸ் மிக அருமையாக வீசி ஆஸ்திரேலிய அணியை வெற்றிப்பாதைக்கு கொண்டு சென்றார்.
Leave a Reply
You must be logged in to post a comment.