தினகரன் வீட்டிற்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் அம்முக துணை பொதுச்செயலாளரும், ஆர்.கே.நகர் எம்.எல்.ஏவுமான டிடிவி தினகரன் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச முயன்ற சம்பவம் அக்கட்சியினர்களை அதிர்ச்சி அடைய செய்தது.
இந்த நிலையில் டிடிவி தினகரனின் வீட்டிற்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று காவல்துறையினர்களுக்கு அக்கட்சியின் நிர்வாகிகள் கோரிக்கை விடுத்தனர்.
இதனையடுத்து இன்று துப்பாக்கி ஏந்திய காவலர்கள் இரண்டுபேர் டிடிவி தினகரன் வீட்டின் முன் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.