தினகரன் ஜோதிடருக்கு வருமான வரித்துறை சம்மன்! கட்டம் சரியில்லையா?
ஜெயலலிதா மற்றும் சசிகலாவின் குடும்பத்தினர்களுக்கு கட்டங்களை பார்த்து ஜோதிடத்தை கணித்த ஜோதிடர் சந்திரசேகர் தன்னுடைய ஜாதகத்தை சரியாக கணித்தாரா? என்று தெரியவில்லை. வருமான வரித்துறையினர் அவரது வீட்டை சல்லடை போட்டு அலசிய பின்னர் முக்கிய ஆவணங்களை கைப்பற்றியதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் ஜோதிடர் சந்திரசேகர் நவம்பர் 20ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்ரு வருமான வரித்துறை சம்மன் அனுப்பியுள்ளது. கடலூரில் உள்ள ஜோதிடர் வீட்டில் ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும், இதுகுறித்து அவரிடம் விசாரணையின்போது விளக்கம் கேட்கப்படும் என்றும் வருமானவரித்துறையினர் தெரிவித்தனர்
ஜோதிடர் சந்திரசேகரிடம் விசாரணை நடந்தால் சிலபல திடுக்கிடும் தகவல்கள் வெளிவரலாம் என்று கூறப்படுகிறது
Leave a Reply
You must be logged in to post a comment.