தினகரன் கோரிக்கையை அரை மணி நேரத்தில் நிறைவேற்றிய தமிழக அரசு

பொள்ளாச்சி பாலியல் வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும் என்று பல அரசியல் கட்சி தலைவர்கள் வேண்டுகோள் விடுத்த நிலையில் சிலமணி நேரங்களுக்கு முன் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது

இந்த நிலையில் அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது டுவிட்டரில் பொள்ளாச்சி பாலியல் பயங்கரத்தில் உண்மை குற்றவாளிகளைப் பிடிக்க வழக்கை சி.பி.ஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று ஒரு நீண்ட அறிக்கையை வெளியிட்டார்.

இதனையடுத்து தமிழக அரசு டிடிவி தினகரனின் அறிக்கை வெளிவந்த அரை மணி நேரதில் இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற முடிவு செய்துள்ளது.

பொள்ளாச்சி விவகாரத்தை வைத்து அரசியல் செய்து அதில் குளிர் காயலாம் என்று நினைத்த அத்தனை அரசியல் கட்சிகளும் தற்போது கப்சிப் ஆகிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply