திடீர் பேருந்து ஸ்டிரைக்கால் மெட்ரோ ரயிலில் அதிகரித்த கூட்டம்

சென்னையில் நேற்று பெரும்பாலான பேருந்துகள் இயக்கப்படாத நிலையில், மெட்ரோ ரயிலில் அதிக பயணிகள் பயணம் செய்தனர். நேற்று ஒருநாள் மட்டும் 1 லட்சத்து 6 ஆயிரம் பேர் பயணம் செய்துள்ளதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது

போக்குவரத்து ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்கப்படாததால் திடீரென போக்குவரத்து ஊழியர்கள் ஸ்டிரைக் செய்ததால் பயணிகள் பெரும் அவதியடைந்தனர். ஆனால் மெட்ரோ ரயில் உள்ள பகுதியில் உள்ள பயணிகள் பேருந்துக்கு பதிலாக மெட்ரோ ரயிலை பயன்படுத்தியதால் நேற்று மெட்ரோ ரயிலில் கூட்டம் அதிகமாக இருந்தது.

இதுகுறித்து மெட்ரோ நிர்வாகம் கூறியபோது, நேற்று ஒருநாள் மட்டும் 1 லட்சத்து 6 ஆயிரம் பேர் பயணம் செய்துள்ளதாக தெரிவித்துள்ளது

Leave a Reply