shadow

சற்றுமுன் சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் திடீரென மழை பெய்துள்ளதை அடுத்து சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஒருசில பகுதிகளில் முழங்காலுக்கும் மேல் மழைநீர் தேங்கியுள்ளது.

இன்று சென்னையில் அம்பத்தூர், வில்லிவாக்கம், காட்பாடி, அண்ணாநகர், திருமங்கலம் ஆகிய பகுதிகளிலும், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி, வடபழனி, அசோக் பில்லர், கிண்டி, திநகர், எழும்பூர், ராயபுரம், அண்ணா சாலை ஆகிய பகுதிகளிலும் கனமழை பெய்தது

இதனால் சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் மழைநீர் பெருகெடுத்து ஓடுவதால் வாகன ஓட்டிகள் கடும் சிக்கலில் உள்ளனர்.