செப்டம்பர் 14ஆம் தேதி அதாவது நாளை முதல் பாராளுமன்ற கூட்டத் தொடர் தொடங்க இருக்கும் நிலையில் காங்கிரஸ் கட்சி பாராளுமன்ற கூட்டத்தொடரில் கலந்து கொள்ள தயாராகி வருகிறது
இந்த நிலையில் திடீரென காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகிய இருவரும் அமெரிக்கா செல்ல உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன
சோனியா காந்தி வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா செல்ல இருப்பதாகவும் அவருக்கு துணையாக ராகுல் காந்தியும் செல்லவிருப்பதாக கூறப்படுகிறது
இதனால் செப்டம்பர் 14ஆம் தேதி தொடங்கும் பாராளுமன்றக் கூட்டத் தொடரின் ஆரம்ப நாட்களை இருவரும் தவற விடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
Leave a Reply
You must be logged in to post a comment.