திகார் சிறையில் 74வது பிறந்த நாளை கொண்டாடு ப.சிதம்பரம்
ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் சிபிஐ காவல் முடிவடைந்தது அடுத்து முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் இன்று நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட நிலையில் அவரை வரும் 19ஆம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
இதனையடுத்து ப.சிதம்பரம் வரும் 19ஆம் தேதி வரை திகார் சிறையில் அடைக்கப்படவுள்ளார். இந்த நிலையில் ப.சிதம்பரத்தின் 74-ஆவது பிறந்தநாள் வரும் 16-ஆம் தேதி வருகிறது. 19-ஆம் தேதி வரை சிறையில் இருக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் அவர் தனது 74வது பிறந்த நாளை சிறையில் கொண்டாட வேண்டிய நிலையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
Leave a Reply
You must be logged in to post a comment.