shadow

தா.பாண்டியன் மருத்துவமனையில் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் அவர்கள் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் மூச்சுத்திணறல் காரணமாக சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் தற்போது மீண்டும் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

மூச்சு திணறல் மற்றும் சிறுநீரகக் கோளாறு காரணமாக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் தா.பாண்டியன் அவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருவதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகின்றன.

தா.பாண்டியன் அவர்கள் மிக விரைவில் நலம் பெற்று வீடு திரும்ப வேண்டும் என்று அனைத்து கட்சியின் அரசியல் தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply