shadow

தாவூத் இப்ராஹிம் எங்கே உள்ளார்? கைதான தம்பியிடம் இருந்து வந்த தகவல்

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் மும்பையில் கைது செய்யப்பட்ட தாவூத் இப்ராஹிமின் தம்பியிடம் இருந்து தாவூத் இப்ராஹிம் இருப்பிடம் குறித்த விசாரணை நடந்துள்ள விவகாரம் தெரியவந்துள்ளது.

சமீபத்தில் கைது செய்யப்பட்ட இக்பாலை தானே போலீஸ் காவலில் எடுத்து விசாரித்து வருகிறது. விசாரணையின் போது தாவூத் இப்ராகிம் பாகிஸ்தானில்தான் உள்ளார் என இக்பால் கஸ்கர் கூறியதாக போலீஸ் தரப்பு தகவல்கள் தெரிவித்து உள்ளது என செய்திகள் வெளியாகி உள்ளது. விசாரணையின் போது கராச்சியில் தாவூத் இப்ராகிம் வசிக்கும் 4 இடங்களின் முகவரியை கஸ்கர் கூறியதாக தகவல்கள் தெரிவித்து உள்ளது என இந்துஸ்தான் டைம்ஸ் செய்தி வெளியிட்டு உள்ளது. இப்போது கிடைக்கப்பெற்று உள்ள தகவல்களை, ஏற்கனவே தாவூத் இப்ராகிம் விவகாரம் தொடர்பாக விசாரித்து வரும் சிபிஐயிடம் தெரிவிக்க போலீஸ் திட்டமிட்டு உள்ளது.

ஏற்கனவே தாவூத் இப்ராகிம் இருப்பிடம் தொடர்பாக விசாரணை முகமைகள் கொண்டு உள்ள தகவல்களும், இப்போது கிடைத்து உள்ள தகவல்களுக்கும் இடையே தொடர்பு உள்ளதா என்பதை பார்க்க முயற்சி செய்யப்படுகிறது என தகவல்கள் வெளியாகி உள்ளது. விரைவில் சிபிஐயும் இவ்விசாரணையில் இணைய வாய்ப்பு உள்ளது என தானே போலீஸ் தரப்பு தகவல் தெரிவித்து உள்ளதாக செய்தியில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

Leave a Reply