தாய் திட்டியதால் மகன் தற்கொலை: மகன் மரணச்செய்தி கேட்டு தாய் தூக்கு
கடலூர் மாவட்டம் காரைக்காட்டை சேர்ந்த காத்தவராயன் என்பவரின் மகன் விக்னேஷ், கல்லூரி ஒன்றில் படித்துவந்தர். இவர் நேற்று தனது தாய் திட்டியதால் மனமுடைந்து ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்,
தனது மகன் தற்கொலை செய்தியைக் கேட்ட தாய் ராஜலட்சுமி அதிர்ச்சி அடைந்து வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். ஒரே நாளில் தாய், மகன் இருவரும் தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சி சம்பவம் அந்த பகுதியில் உள்ளவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது
போலீசார் இருவருடைய பிணங்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.