shadow

தாய்லாந்து குகையில் 8 சிறுவர்கள் மீட்பு: அனைவரையும் மீட்க தீவிரம்

தாய்லாந்து நாட்டில் உள்ள குகை ஒன்றில் 15 சிறுவர்கள் மற்றும் ஒரு பயிற்சியாளர் சிக்கி கொண்ட நிலையில் அவர்களை மீட்க தாய்லாந்து நாட்டின் மீட்புபடையினர் தீவிர முயற்சியில் உள்ளனர்.

கடந்த ஒருவாரமாக நடந்த மீட்புப்பணியில் தற்போது சிறுவர்கள் இருக்கும் இடம் கண்டுபிடிக்கப்பட்டு ஒவ்வொருவராக மீட்கப்பட்டு வருகின்றனர். இதுவரை எட்டு சிறுவர்கள் மீட்கப்பட்டதாகவும் இன்னும் ஏழு சிறுவர்களையும் பயிற்சியாளரையும் மீட்கும் பணி நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஒவ்வொரு சிறுவனுக்கும் 2 முக்குளிப்போர் வீதம் மீட்பு பணிகள் தொடர்ந்து வருவதாக தாய்லாந்து மீட்புப்பணிக்கு தெரிவித்துள்ளது. மேலும் * மீட்கப்பட்ட சிறுவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளும் தாய்லாந்து அரசு செய்து வருகிறது

Leave a Reply