shadow

தாயின் மார்பில் பால் குடித்த குழந்தை மூச்சு திணறி மரணம்

தாயின் மார்பில் பால் குடித்த பச்சிளம் குழந்தை மூச்சு திணறி உயிரிழந்த பெரும் சோக சம்பவம் சென்னை அருகே நடந்துள்ளது.

சென்னை காசிமேடு சிங்காரவேலன் நகரை சேர்ந்த தம்பதி சத்யராஜ் – செலஸ்டின் தம்பதிகளுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர் . முதல் குழந்தைக்கு ஒன்றரை வயதாகிறது. இரண்டாவது குழந்தை பிறந்து 18 நாள்தான் ஆகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு செலஸ்டின் தனது குழந்தைக்கு பாலூட்டினார். பிறகு தூங்க வைக்கலாம் என்று செலஸ்டின் தூக்கியபோது, குழந்தை மயங்கி சரிந்தபடியே இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் உடனடியாக ஸ்டான்லி மருத்துவமனைக்கு தூக்கி கொண்டு ஓடினார்கள். ஆனால் குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள், ஏற்னவே இறந்து விட்டதாக கூறினர்.

தாயிடம் பால் குடிக்கும்போது ஏற்பட்ட மூச்சுத்திணறல்தான் குழந்தை இறந்ததற்கு காரணம் என்று டாக்டர்கள், தெரிவித்தனர். இதுகுறித்து காசிமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply