தாம்பரத்தில் துப்பாக்கி சூடு: நெற்றிப்பொட்டில் குண்டு பாய்ந்து மாணவர் பலி

தாம்பரம் அருகே பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் மாணவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

இந்த துப்பாக்கி சூட்டில் பாலிடெக்னிக் மாணவர் முகேஷ் என்பவர் உயிரிழந்ததாகவும், மாணவர் முகேஷ் நெற்றி பொட்டில் துப்பாக்கி குண்டு பாய்ந்தது என்றும் அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்துள்ளது

பாலிடெக்னிக் மாணவர் மீது மற்றொரு மாணவர் துப்பாக்கி சூடு நடத்திய இந்த சம்பவத்தால் அந்த பகுதியே பெரும் பரபரப்பில் உள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் காவல் கண்காணிப்பாளர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டுள்ளார்.

துப்பாக்கி சூட்டில் பலியான முகேஷ் பாலிடெக்னிக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருவதாகவும் இவர் தன்னுடையநண்பர் விஜய் என்பவருடன் ஒரே அறையில் பேசிக்கொண்டிருக்கையில் துப்பாக்கி சத்தம் கேட்டதாகவும் முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த நிலையில் தற்போது விஜய் தலைமறைவாகியுள்ளார்.

Leave a Reply