shadow

தாமரை எப்படி மலரும்? மு.க.ஸ்டாலின் கேள்விக்கு தமிழிசை பதிலடி

திருச்சியில் இன்று நடைபெற்ற திமுக கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழகத்தில் தண்ணீர் இல்லாததால் புல்லே முளைக்கவில்லை, இதில் தாமரை எப்படி மலரும் என பாஜகவை கிண்டலடித்து பேசினார்

மு.க.ஸ்டாலினின் இந்த பேச்சுக்கு பாஜக தமிழக தலைவர் தமிழிசை செளந்திரராஜன் தனது டுவிட்டரில் பதிலடி கொடுத்துள்ளார். அவர் இதுகுறித்து கூறியதாவது:

இனி மழை காலம் ஆரம்பம். மழை வந்தால் சூரியன் மறையும் குளம் நிறையும் தாமரை மலரும்.செயற்கை மழை வரும் விஞ்ஞான காலம். ஊழல் விஞ்ஞானிகளை விரட்டியடிக்க செயற்கை மழைநீர் வரவைத்தா கிலும் குளங்களை நிரம்ப வைத்து தாமரை மலர செய்வோம் காவிப்படை ரத்தத்தாலும் வியர்வையாலும் தாமரை மலரும்

Leave a Reply