’தாதா’ கங்குலியால் பழிவாங்கப்பட்டாரா தல தோனி?
கடந்த ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரையிறுதி போட்டியில் விளையாடிய தோனி, அதற்கு பிறகு இன்னும் ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை. ஒரு சில தொடர்களை தோனியே தவிர்த்து வந்தாலும் அதன் பின்னர் அவர் விளையாட ஆர்வமாக இருந்தும் அவர் அணியில் சேர்க்கப்படவில்லை
குறிப்பாக சவுரவ் கங்குலி பிசிசிஐ தலைவராக பொறுப்பேற்ற பின்னர் தோனியை சாமர்த்தியமாக ஒதுக்கியதாகவும் அவருடைய செயலால்தான் தோனி ஓரங்கட்டப்படுவதாகவும் கூறப்படுகிறது தான் கேப்டனாக இருந்தபோது செய்ய முடியாத சாதனைகளை தோனி செய்து விட்டதே கங்குலியின் இந்த செயலுக்கு காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது இதுவும் ஒருவகை பழிவாங்கும் நடவடிக்கை என்றே தோனியின் ரசிகர்கள் கருத்து கூறி வருகின்றனர்
இருப்பினும் தல தோனியின் புகழை யாராலும் அழிக்க முடியாது என்றும் அவர் தொடர்ந்து ஐபிஎல் போட்டிகளில் விளையாடி தனது திறமையை நிரூபிப்ப்பார் என்றும் அவரது ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்
Leave a Reply
You must be logged in to post a comment.