shadow

தவான் அதிரடி சதம்: இலங்கையை வீழ்த்தி தொடரை வென்ற இந்தியா

இலங்கை அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்று போட்டியையும் தொடரையும் வென்றது.

நேற்றைய போட்டியில் முதலில் களமிறங்கிய இலங்கை அணி 44.5 ஓவர்களில் 215 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தரங்கா 95 ரன்களும், சமரவிக்ரமா 42 ரன்களும் எடுத்தனர். 216 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணி, ஆரம்பத்தியேலேயே கேப்டன் ரோஹித் விக்கெட்டை இழந்தாலும் தவான், ஸ்ரேயாஸ் ஐயர் அதிரடியில் வெற்றியை நோக்கி பயணம் செய்தது

இறுதியில் 32.1ஓவரில் இந்தியா 2 விக்கெட்டுக்களை மட்டும் இழந்து 219 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. தவான் 85 பந்துகளில் 2 சிக்சர் மற்றும் 13 பவுண்டர்களுடன் 100 ரன்கள் எடுத்தார். எஸ்.எஸ்.ஐயர் 65 ரன்கள் குவித்தார். இந்த வெற்றியின் மூலம் இந்தியா 2-1 என்ற புள்ளிக்கணக்கில் தொடரை வென்றது

இந்த போட்டியில் 3 முக்கிய விக்கெட்டுக்களை வீழ்த்திய குல்தீப் யாதவ் ஆட்டநாயகன் விருதையும், தவான் தொடர் நாயகன் விருதையும் பெற்றனர். இரு அணிகளுக்கு இடையிலான டி-20 போட்டிகள் வரும் 20ஆம் தேதி தொடங்குகிறது.

Leave a Reply