தர்மயுத்தம் தொடங்கிய பிறகு டிடிவி தினகரனை ஓபிஎஸ் சந்தித்தது உண்மை: தங்கத்தமிழ்செலவன்
டிடிவி தினகரன் மற்றும் ஓபிஎஸ் சந்திப்பு குறித்த சர்ச்சை கடந்த இரண்டு நாட்களாக இருந்து வரும் நிலையில் இந்த பிரச்சனையை ஆரம்பித்து வைத்த தங்கத்தமிழ்செலவன் சற்றுமுன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
டிடிவி தினகரனை ஓபிஎஸ் சந்தித்ததாக நான் கூறியது பொய் என்றால் வழக்கு தொடரட்டும். தர்மயுத்தம் தொடங்கிய பிறகு டிடிவி தினகரனை ஓபிஎஸ் சந்தித்தது உண்மை. நான் முதல்வராகிவிடுவேன் எனக்கு ஆதரவு தாருங்கள் என ஓபிஎஸ் கூறியதும் உண்மை
இந்த நிலையில் சென்னையில் இன்று மாலை 6.30 மணிக்கு செய்தியாளர்களை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சந்தித்து இதுகுறித்து விரிவான விளக்கம் அளிக்கவுள்ளார்
Leave a Reply
You must be logged in to post a comment.