’தர்பார்’ வெளியாகாதத்தால் ரசிகர்கள் ரகளை: போலீஸ் தடியடி
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’தர்பார்’ திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகி பாசிட்டிவ் விமர்சனங்கள் வெளிவந்து கொண்டு இருக்கின்றன. இந்த நிலையில் திண்டுக்கல் நகர் பகுதியில் மட்டும் ’தர்பார்’ திரைப்படம் வெளியாக வில்லை
அந்த பகுதியில் உள்ள திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் இடையே ஒப்பந்தம் செய்வதில் பிரச்சினை ஏற்பட்டதால் இந்த படம் இன்னும் வெளியாகவில்லை என்றும் இன்று மதியம் அல்லது மாலை முதல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
இதனால் திண்டுக்கல் பகுதியில் உள்ள ரஜினி ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து தியேட்டரில் பேனர்களை கிழித்து அவர்கள் ரகளையில் ஈடுபட்டதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து லேசான தடியடி நடத்தி அவர்களை கலைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
Leave a Reply
You must be logged in to post a comment.