பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் சமீபத்தில் காலமானார் என்பது தெரிந்ததே அவரது நினைவைப் போற்றும் வகையில் ரசிகர்கள் மற்றும் திரையுலகைச் சேர்ந்தவர்கள் பலர் அவரது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவு செய்து வருகின்றனர்

இந்த நிலையில் தற்போது எஸ்பிபி சிறுவயதில் பாடிய ஒரு பாடல் குறித்த புகைப்படம் வெளிவந்துள்ளது அந்த புகைப்படத்தில் எஸ்பிபி தரையில் உட்கார்ந்து ஒரு பெண்ணுடன் பாடிக் கொண்டிருக்கிறார்

அவர் அருகில் இளையராஜா உட்கார்ந்து ஆர்மோனியம் வாசித்துக் கொண்டிருக்கிறார். இந்த பழைய புகைப்படம் தற்போது வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது

Leave a Reply