தரமற்ற மிளகுப்பொடி: சென்னையில் பிரபல உணவகத்திற்கு தடை!
சென்னையில் பல கிளைகள் கொண்ட பிரபல உணவகம் ஒன்றின் போரூர் கிளையின் உணவகத்தை நடத்த உணவு துறை அதிகாரி தடை விதித்துள்ளார்.
இந்த உணவகத்தில் தரமற்ற மிளகுப் பொடியை பயன்படுத்தியதால் இந்த தடையை உணவுத் துறை அதிகாரிகள் விதித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. மேலும் தரமற்ற மிளகுப்பொடியை பயன்படுத்தியதற்காக இந்த உணவகத்திற்கு ரூ. 30 ஆயிரம் அபராதம் விதித்தும் உத்தரவிடப்பட்டுள்ளது.
முன்னதாக திருவள்ளூர் மாவட்ட உணவு துறை அதிகாரி கவிக்குமார் தலைமையிலான அதிகாரிகள் அதிரடியாக இந்த உணவகம் உள்பட பல உணவகங்களை சோதனை செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
Leave a Reply
You must be logged in to post a comment.