தயாரிப்பாளர் சங்க விவகாரம்: துணை முதல்வரை சந்தித்த பின் பாரதிராஜா பேட்டி
தயாரிப்பாளர் சங்க விவகாரம் குறித்து சற்றுமுன் சென்னை க்ரீன்வேஸ் சாலையில் உள்ள துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களை அவரது வீட்டில் நேரில் இயக்குனர் பாரதிராஜா சந்தித்தார்.
துணை முதல்வரை சந்தித்து நடந்த பிரச்சினைகளை கூறியதாகவும், தயாரிப்பாளர் சங்க விவகாரத்தில் அரசு நடுநிலையாக செயல்பட வேண்டும் என்றும் இயக்குநர் பாரதிராஜா கேட்டுக்கொண்டார். பாரதிராஜாவுடன் துணை முதல்வரை பார்க்க சென்றிருந்த ஜே.கே.ரித்தீஷ் கூறியபோது, ‘தயாரிப்பாளர் சங்க விவகாரத்தில் கோட்டாட்சியர் விசாரணைக்கு எங்கள் தரப்பில் முழு ஒத்துழைப்பு அளிக்கப்படும்’ என்று தெரிவித்தார்.
Leave a Reply
You must be logged in to post a comment.