தயாரிப்பாளர் சங்க அலுவலகத்திற்கு வட்டாட்சியர் சீல்: பெரும் பரபரப்பு
தி.நகரில் உள்ள தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க அலுவலகத்திற்கு வட்டாட்சியர் சீல்வைத்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தயாரிப்பாளர்கள் சங்கத்தின் இருதரப்பும் சமாதானம் ஆன பிறகே அலுவலகம் திறக்கப்படும் என்றும், தயாரிப்பாளர் சங்கத்தில் நிலவும் உச்சகட்ட மோதலை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது
இருதரப்பிலும் சமாதான பேச்சுவார்த்தை நடத்திய பின்னரே தயாரிப்பாளர் சங்க அலுவலகம் திறக்கப்படும் என தகவல் வெளிவந்துள்ளதை அடுத்து தற்போது சென்னை அண்ணாசாலையில் உள்ள தயாரிப்பாளர் சங்க அலுவலகத்தில், செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் தயாரிப்பாளர்களுடன் விஷால் ஆலோசனை நடத்தி வருகிறார்.
Leave a Reply
You must be logged in to post a comment.