தயாநிதி மாறன் என்ன காந்தியின் வாரிசா? பரம ஏழையா? அமைச்சர் ஜெயக்குமார்

தயாநிதி மாறன் நாடு போற்றும் உத்தமரா? காந்தியின் வாரிசா? பரம ஏழையா? என அமைச்சர் ஜெயக்குமார் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளார்.

வேலூர் தொகுதியில் கோடி கோடியாக பணம் கைப்பற்றப்பட்டு தேர்தல் நிறுத்தப்பட்டது தயாநிதி மாறனுக்கு தெரியாதா? என்றும் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

முன்னதாக மக்களவையில் இந்தி, நீட் திணிப்பு, காவிரி நீர் கிடைக்காமை, தண்ணீர் தட்டுப்பாடு குறித்து தி.மு.க. எம்.பி. தயாநிதிமாறன் ஆவேசப் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply