shadow

தமிழ் தமிழ் என பேசும் திமுக இதுக்கு மட்டும் தமிழர்களை அழைக்காதது ஏன்?

18 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்கம் குறித்த வழக்கு நேற்று சென்னை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தபோது இந்தியாவின் புகழ்பெற்ற வழக்கறிஞர்கள் இந்த வழக்கில் வாதாடினார்கள்.

இந்த வழக்கில் 18 எம்.எல்.ஏக்களுக்காக பிரபல வழக்கறிஞர் சல்மான் குர்ஷித் அவர்களும், ஸ்டாலின் தரப்பில் கபில்சிபல் அவர்களும் வாதாடினர். அதேபோல் பிரபல வழக்கறிஞர் அரிமாசுந்தரம் சபாநாயகர் தனபால் சார்பிலும், எடப்பாடி பழனிச்சாமி சார்பில் வவத்தியநாதன் என்ற சீனியர் வழக்கறிஞரும், கவர்னர் சார்பில் ராகேஷ் திவாதி என்பவரும், தமிழக அரசு சார்பில் சுப்பிரமணியம் பிரசாத் என்பவரும் வாதாடினர்.

இந்த வழக்கில் வாதாடிய பெரும்பாலான வழக்கறிஞர்கள் வட இந்தியாவில் இருந்து வந்தவர்கள் தான். ஒவ்வொருவருக்கும் நாள் ஒன்றுக்கு லட்சக்கணக்கில் சம்பளம் பெறுபவர்கள். தமிழ், தமிழ் என்று பேசும் திமுக கூட தமிழக வழக்கறிஞர்களை நம்பாமல் வட இந்தியாவில் இருந்து வழக்கறிஞர்களை வரவழைத்தது ஏன்? என்று பலர் கேள்வி கேட்டு வருகின்றனர்.

Leave a Reply